இன்றைய காதல் மென்மையானது.
மெலிதானது.
பல பல உணர்வுகளை அள்ளித்தருவது.
சபலத்தில் உருவாவது.
அறியாமையில் அனிச்சையாய் வருவது.
சினிமா,பத்திரிக்கை,தொலைகாட்சி பணம் பார்க்க உதவுவது.
கையிலே வருமானம்.பையிலே பணம்.
தோன்றுகிறது தான்தோன்றித்தனம்.
வறுமை கதவை தட்டும் போது,
காதல் ஜன்னல் வழியே ஓடுகிறது.
காதலுக்குப்பின் சேர்ந்து வாழும் வாழ்கை பெரும்கடல்.
சமுத்திரத்தில் நீந்தினால் தெரியும்.
தூரமும்,ஆழமும்,ஆபத்தும் எவ்வளவு என்று.
பணத்திற்காக காதலை பயன்படுத்துவதும்
ஒரு வகையில் விபச்சாரமே.
திருமணத்திற்குமுன் காதல் மயக்கத்தில்
ஏகப்பட்ட திட்டங்கள்,ஒபந்தங்கள்.
எல்லாம் மண்ணோடு மண்ணாய்.
கற்ற கல்வி துணை என்ற ஆணவம்.
கல்வி குடுத்தது பெற்றவர்.
பெற்றவர் பெற்றது வைத்தெரிச்சல்.
அருகம்புல் அரைச்சு குடித்தாலும்,
பெரண்டையை அரைச்சு பூசினாலும் போகாது.
கற்பு என்ற ஒரு சொல்லே மீதி வாழ்க்கையை
ஒட்டிசெல்கிறது.
கற்பும் தறி கேட்டு போனால் வாழ்கையின் கதி அதோகதிதான்.
No comments :
Post a Comment