Saturday 13 October 2012

துக்கத்தின் எல்லை

மனதில் குழப்பம், துன்பம்
சிகரட் பாக்கட் பாக்கெட்டாக ஊதியாச்சு
துன்பம் போகலே.
பாட்டில் பாட்டிலாக மதுவும் குடிச்சாச்சு
போதை தெளிஞ்சவுடன் காத்திருந்த துன்பம்
மீண்டும் உள்ளே வந்தாச்சு.
தியானம் பண்ண முடியல.நிம்மதியில்ல
தற்கொலை செஞ்சா அந்த துன்பம் இரு மடங்காகி
நம்மைச் சார்ந்தவங்களை பற்றிக்கொள்ளும் என்பது
நன்கு தெரியும்.
ஒரே வழிதான் இருக்கு.
மொபைல ஆப் பண்ணீட்டு கோவிலுக்குள்ளே போய்
கடவுள் முன்னாள் வெட்கம், மானம், வறட்டு கவுரவம்
எல்லாம் விட்டு கதறி முறையிடு.
உன் துன்பத்துக்கு துன்பம் தர ஒரே வழி இதுதான்.

    

No comments :