Wednesday 21 December 2016
Thursday 15 December 2016
Wednesday 30 November 2016
Thursday 3 November 2016
Tuesday 1 November 2016
துரோகம்
மனிதன் தனது ஆறாம் அறிவை பயன்படுத்தி
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஈன செயல்.
( நம்ப வைத்து ஏமாற்றுவது ).
தூய்மையான எண்ணங்களுடன்
இறைவனிடம் ஆத்மார்த்தமாக
நம்மை அர்ப்பணிக்கும் போது
நமக்கு தெரியாதவாறு,
பிறர் செய்த துரோகம் வலுவிழந்து போகும்.
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஈன செயல்.
( நம்ப வைத்து ஏமாற்றுவது ).
தூய்மையான எண்ணங்களுடன்
இறைவனிடம் ஆத்மார்த்தமாக
நம்மை அர்ப்பணிக்கும் போது
நமக்கு தெரியாதவாறு,
பிறர் செய்த துரோகம் வலுவிழந்து போகும்.
Wednesday 19 October 2016
Wednesday 12 October 2016
நாட்டு நாய்
நன்றி என்ற சொல்லுக்கு தகுதியான மனிதனின் நண்பன்.
தமிழ் மொழி நன்கு புரிந்துகொள்ளும் நாலு கால் ஜீவன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த
விசுவாசத்தின் அடையாளம்.
அந்நிய நாட்டு கவர்ச்சி ஈர்ப்பால் மற்ற வெளிநாட்டு நாய்களை வளர்க்கும்
வறட்டு ஜம்ப மனித பதர்கள் .
நாங்கள் அதிகம் பெருகிவிட்டோம் என எங்களை எங்கள் இனத்தை வளர விடாமல் எங்களுக்கு கருத்தடை செய்து
எங்கள் இனம் பெறுக விடாமல் அழிக்கும் அந்நிய சக்தியின் சதிவலை.
இந்நிலை நீடித்தால் எங்கள் இனம் முற்றிலும் அழிந்து போகும்.
எங்கள் அருமை உணர்ந்த, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தராய் எங்கள் இனத்தை பாதுகாப்பது கிராமத்து மக்களே.
இறுதியாக ஒன்று...
உங்கள் பகுதியில் திரியும் எங்களுக்கு உணவிடுங்கள்.
எங்கள் இனத்தில் ஆணோ,பெண்ணோ, காது வெட்டு படாமல் இருந்தால் , (காது வெட்டுப்பட்டு இருந்தால் அதற்கு கருத்தடை செய்ததாக அர்த்தம்.)
தயவு செய்து அதன் கழுத்துக்கு ஒரு பட்டை(Belt) அணிவியுங்கள்.
கழுத்துப்பட்டை அணிந்த நாய்களை கருத்தடை செய்ய அதிகாரம் கிடையாது.
எங்கள் அருமை உணர்ந்த, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தராய் எங்கள் இனத்தை பாதுகாப்பது கிராமத்து மக்களே.
இறுதியாக ஒன்று...
உங்கள் பகுதியில் திரியும் எங்களுக்கு உணவிடுங்கள்.
எங்கள் இனத்தில் ஆணோ,பெண்ணோ, காது வெட்டு படாமல் இருந்தால் , (காது வெட்டுப்பட்டு இருந்தால் அதற்கு கருத்தடை செய்ததாக அர்த்தம்.)
தயவு செய்து அதன் கழுத்துக்கு ஒரு பட்டை(Belt) அணிவியுங்கள்.
கழுத்துப்பட்டை அணிந்த நாய்களை கருத்தடை செய்ய அதிகாரம் கிடையாது.
Thursday 11 August 2016
Friday 22 July 2016
Saturday 18 June 2016
காதலும் கத்தரிக்காயும்
காதலும் கத்தரிக்காயும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
சிலது சொத்தையாக இருக்கும்.
சிலது புழுவோடு இருக்கும்.
சிலருக்கு புண் இருந்தால் கத்தரிக்காய் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.
முருங்கையோடு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை நெருப்பில் சுட்டு பச்சடி செய்வார்கள்.
பெற்றோர் திட்டும் போது காதலாவது கத்தரிக்கையாவது எனவும் திட்டுவர் .
காதல்-கத்தரிக்காய்
முருங்கை-தாம்பத்தியம்
சாதம்-வாழ்க்கை
Sunday 1 May 2016
Wednesday 20 April 2016
மரம்
உன் பாட்டன் நான் வாழும் இடம் அருகில் இடம் வாங்கினான்.
உன் அப்பன் அந்த இடத்தில் வீடு கட்டினான்..
நீ வசிக்கும் வீட்டில் என் வேர் ஊடுருவும்
என
என்னை வெட்ட சொல்லி விட்டாயே,
நன்றிகெட்ட மனிதனே ,
நான் வாழ்ந்த இடத்தில், நீ வசிக்க என்னையே அழிக்க துணிந்தவன் நீ.
உன் மூதாதையர்களையும்,எத்தனையோ பறவைகளையும் ,
இந்த பூமியையும் காத்த என்னை அழித்தால் உன் தலைமுறைகள் எப்படி தழைக்கும்?.
நான் இறந்தாலும் விறகாக பயன்படுவேன்.
நீ இறந்தாலும் உன்னை எரிக்கவோ, புதைக்கவோ நான் பயன்படுவேன்.
இறுதியாக உனக்கு ஒன்று சொல்லுகிறேன்.
என் தயவால்தான் நீ...
உன் தயவால் நான் அல்ல...
நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனக்கு அது முக்கியமல்ல...
முதலில் நீ நன்றி மறவாத மனிதனாக இரு.
Wednesday 13 April 2016
வாக்காளர்கள்
தேர்தல் சமயம் எத்தனையோ கட்சிகள்,
எத்தனையோ வாக்குறுதிகள்,
எனக்கு எந்த கட்சியும் பிடிக்கவில்லை,
நான் வோட்டு போட போவதில்லை
என
கூறுவது மிகவும் தவறு.
உன்னை போன்றோருக்காக வோட்டு மெசினில் கடைசியாக
NOTA (None Of The Above)
பொத்தான் உள்ளது.
அதையாவது அழுத்தித்தொலை.
அப்போதுதான் இந்திய தேசிய கொடியை உன் நெஞ்சில் சுமக்கும் அருகதை உனக்கு உண்டு.
Monday 21 March 2016
தொப்புள்கொடியும் - தேசியக்கொடியும்
தொப்புள்கொடி அறுத்தவுடன், தேசியக்கொடி நம்மோடு பிணைகிறது.
முதலாவது நமக்கு உயிர் கொடுத்தது. இரண்டாவது நம்மை வாழ வைப்பது.
அப்படிப்பட்ட தேசியக்கொடியை இருகரம் கூப்பி வணங்குவோம்.
நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்த வெள்ளையன் பண்பு சல்யூட். அடிமையாய் இருந்தபோது அவனிடம் கற்ற அவன் செய்கையை அப்படியே பின்பற்றுவது என்ன (இன்றுவரை) மடமை.
சல்யூட் நம் தேச கலாச்சாரம் அல்ல.நம் பண்பு அல்ல.
இனிமேலாவது நம் தேசியக்கொடியை இருகரம் கூப்பி வணங்குவோம்.
சல்யூட் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள கூகிள்லில் தேடி பாருங்கள் உண்மை புரியும்.
Thursday 25 February 2016
Thursday 18 February 2016
ஜெய்க்க வேண்டும்
சிரிக்கும் வரை சிரித்து விட்டேன்.
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...
ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...
ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?
Thursday 21 January 2016
கலைவாணி
அன்பின் திருவுருவம் நீ.
அறிவின் அகல்விளக்கு நீ.
உன் அருள் கிடைக்க எத்தனை பிறவிகள் தவம் செய்தேனோ..?
மாசில்லா நவரத்தினங்கள் நீ.
பணம் படைத்த அதிகார வர்கத்தினர் ,
பணிந்து முகஸ்துதி பாடி
உன் அருள் பெற்றவன் பாமரனாயினும் ,
அவன் காலில் விழ வைக்கும்
உன் மகிமையே மகிமை.
தாயே, உன் அருள் பெற்றவன்
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க ,
பிழைக்க சிறிதளவாவது பண வசதி
வேண்டாமா ?.
மனமிறங்கு தாயே.
பேயாயினும் தாய் தாயே.
ஆனால் நீயோ தாயிக்கெல்லாம் தாய்.
உன் மகன் துன்பத்தின் , துயரத்தை அன்போடு அடியோடு துடைத்து கொடம்மா.
மரகத வீணையை மீட்டம்மா.
மனமிறங்கு தாயே கலைவாணி.
Friday 15 January 2016
ஜல்லிக்கட்டு
எதற்கெடுத்தாலும் நீதிமன்ற உத்தரவு.
நியாயமாய் தீர்க்க வேண்டிய வழக்குகள் எத்தனையோ இருக்க,
எத்தனை மாநிலங்கள் இந்தியாவில்..
பல்வேறு மொழிகள்,
பல்வேறு கலாச்சாரங்கள்,
பல்வேறு உணவுகள்,
என் தேசம், என் நாடு என்றால் அனைவரின் உணர்வும் ஒன்றே..
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது.
அனைத்திற்கும் கடவுள் என ஒருவர் இருக்கிறார்.
நேரம், காலம் வரும்போது அவர் யாரெனத் தெரியும்.
அந்நிய தீய சக்தியின் ஊடுருவளை
இந்தியாவில் வசிக்கும் ஒரு கொசு கூட அனுமதிக்காது.
போகும் போக்கை பார்த்தால் மீண்டும் அரசாட்சி அமையலாம்.
நீதிமன்றம் அரசவைகளாகவும் , முதலமைச்சர்கள் குறுநில மன்னர்களாகவும்
மாறும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.