Thursday 21 January 2016

கலைவாணி


அன்பின் திருவுருவம் நீ.
அறிவின் அகல்விளக்கு நீ.
உன் அருள் கிடைக்க எத்தனை பிறவிகள் தவம் செய்தேனோ..?
மாசில்லா நவரத்தினங்கள் நீ.
பணம் படைத்த அதிகார வர்கத்தினர் , 
பணிந்து முகஸ்துதி  பாடி 
உன் அருள் பெற்றவன் பாமரனாயினும் ,
அவன் காலில் விழ வைக்கும் 
உன் மகிமையே மகிமை.
தாயே, உன் அருள் பெற்றவன் 
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க ,
பிழைக்க சிறிதளவாவது பண வசதி 
வேண்டாமா ?.
மனமிறங்கு தாயே.
பேயாயினும் தாய் தாயே.
ஆனால் நீயோ தாயிக்கெல்லாம் தாய்.
உன் மகன் துன்பத்தின்  , துயரத்தை அன்போடு அடியோடு துடைத்து கொடம்மா.
மரகத வீணையை மீட்டம்மா.
மனமிறங்கு தாயே கலைவாணி.

No comments :