அசோக சக்கரத்தில் |
அனைவரும் ஒற்றுமையாய் அறப்போராட்டத்தில் இரவும், பகலும், 7 நாட்கள் அறப்போராட்டத்தில் போராடி ஜல்லிக்கட்டு சட்டத்தை, தமிழர் உரிமையை மீட்டு தந்தனர்.
இதில் ஜாதி, மதம் , பாலினம் பாகுபாடெல்லாம்
மறித்து போய்
தமிழர் உரிமை என்ற ஒன்றே தலை தூக்கி நின்றது.
ஆறாம் நாள் இரவு முதல் பல தரப்பட்ட கட்சிகளை சேர்ந்த
அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள் சூழ்ச்சிகள் அரங்கேற தொடங்கின.
பாவம் இளைய சமுதாயம்.
சூதிலே அந்த சகுனியையே தோற்கடிக்கும் நம் அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள் எதிர்கொள்ள முன்பே முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் அறப்போராட்டத்தை
நேர்த்தியாக நடத்த ஒத்திகை பார்த்து தயாராகி விட்டார்கள்
தமிழ் மாணவ சமுதாயம் என்றே சொல்லலாம்.
தேவைப்பட்டதை நேர்மையாகவும், அமைதியாகவும்,
பாதுகாப்பாகவும் (உலகிற்கே எடுத்துக்காட்டாய்) ஒற்றுமையாகவும்
அறப்போராட்டம் மூலம் மாணவ இளையசமுதாயம்
செய்து காட்டி வெற்றியும் கண்டு விட்டது
என்பதே நிதர்சனமான உண்மை.
No comments :
Post a Comment