அடிமைத்தனம் என்னும் துன்பம்
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போதும்,
சகிப்புத்தன்மை எல்லையை தொடும்போதும்
நியாயமான போராட்டமாக உருவெடுக்கிறது.
இறுதியாக மக்களிடம் போராட்ட குணம் மேலோங்குகிறது.
நாடெங்கும் எங்கும் கலவரம்.
பொது சொத்து (அது அவர்களின் சொத்து) சூறையாடப்படுகிறது.
வன்முறை வெடிக்கிறது. கலவரம் செய்தவர்கள் சில,பல பேர் கொல்லப்பட்டும் போராட்டம் ஓயவில்லை.
முடிவில் மக்கள் கேட்டது அவர்களுக்கு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது.
பிரிவினை மக்களுக்குள் இந்த நிலையில் விஸ்வரூபம் எடுக்கிறது (இதில் அரசியல் பங்கு அதிகம் உள்ளது).
மேற்கூறிய இவையெல்லாம் பல நாடுகளில் இன்றுவரை நடந்துவரும் சம்பவங்கள் நாம் இதுவரை கண்டு வருவது.
ஆனால் தமிழர்களின் அறப்போராட்டம் உலகிற்கே முதல் எடுத்துக்காட்டாய் அமைந்தது. உலக தமிழர்கள் அனைவரும் அறப்போராட்ட களத்தில், துபாயில் இருப்பவர் அங்கிருந்தே,
அதுபோல் அனைத்து உலக நாடுகளில் இருக்கும், தமிழர்கள் அறப்போராட்டத்தை நடத்தி அறப்போராட்டம் என்னும் சக்தியின் (அணுகுண்டை விட) வலிமையை உலகிற்கு காட்டி விட்டனர்.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்னும் வாசகத்தை பார்க்க முடிந்தது.
என்னை பொறுத்தமட்டில் (ஒடுக்கப்பட்டவர்கள்)
விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது
என்றே முழமையாக நம்புகிறேன்.இதையே ஜனங்களின் நாயகமாக (ஜனநாயகமாக) விழைகிறேன்.
No comments :
Post a Comment