நீயும் நானும் பிச்சைக்காரர்கள்தான்.
நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்,
என்ன செய்வது உண்மை இதுதானே.
பணம்தானே நம் தேடல்...
உணர்வுகள் நமக்கு முக்கியமில்லையே..
கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் முதலாளிகூட்டம்.
அனைத்திலும் ஊழல், அரசியல்வாதிகள், அதிகாரிகள்.
நீதான் எல்லாம் தெரிந்த அறிவாளியாயிற்றே.
நீ என்னை குறைகூறுவாய். நானும் உனைபோலதான்.
நாட்டைப்பற்றி நமக்கென்ன கவலை.
இரண்டாயிரம் ரூபாய்க்கு நம் ஓட்டை விற்போம்.
ஊழலற்ற ஆட்சி என வாய்கிழிய பேசி, ஊழலே ஆட்சி செய்யும் கொடுமை.
இறுதியில் ஒன்று...
இனி இரண்டே இனம்
ஒன்று அடிமையினம்,
இரண்டு பணக்கார இனம்.
நடுத்தரமும் இல்லை.
ஏழையும் இல்லை.
நாங்கள் பிச்சைக்காரர்கள்.
No comments :
Post a Comment